நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியில்  3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேவேளை, கொழும்பு நகர எல்லைக்குள் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.