நாளைய மின்துண்டிப்பு அறிவித்தல்

நாளை, 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் நாளை முற்பகல் 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.