நாய்களுக்கான விசர்நோய் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ?

நாய்களுக்கான விசர்நோய் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் விசர்நோய் வேகமாக பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக , பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எல் டி கித்சிறி எச்சரித்துள்ளார்.

கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ரேபிஸ் நோயால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் நாய்க்கடி தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது , நாய் கடித்தால் 95சதவீதம் தொற்று ஏற்படுகிறது. விசர்நோய்க்கு எதிரான நாய்களுக்கு தடுப்பூசி போடாததே இதற்கு காரணமாகும்.
இலங்கையில் சுமார் 7 மில்லியன் நாய்கள் உள்ளன, ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

இதேவேளை 2022ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் நாய்களுக்கு ரேபிஸ{க்கு எதிராக தடுப்பூசி போட்டது மற்றும் 40,000 பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாய்க்கடியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மனிதர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.