வளிமண்டலவியல் திணைக்களம் இன்று திங்கட்கிழமை இலங்கையின் நான்கு மாகாணங்களில் கடுமையான வெப்பம் நிலவுவதற்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீடித்த வெளிப்பாடு மற்றும் செயல்பாட்டின் மூலம் சோர்வு சாத்தியமாகும் என்று கூறிய வானிலை திணைக்களம், தொடர்ச்சியான செயல்பாடு வெப்ப பிடிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.

