நாடு முழுவதும் முப்படையினரை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையை அனுப்புவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அது பொது பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி. வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரையும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்த முடியும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.