நல்லூர் திருவிழாவில் தவறவிட்ட உடமைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

நடைபெற்று முடிந்த நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டை, பணப்பைகள், மணிக்கூடு, தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் என்பன யாழ்ப்பாணம் மாநகர சபையின் உற்சவகாலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மாநகர சபை அலுவலகத்தில் உள்ளன.

குறித்த பொறுட்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.