தோழன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவிக்கு நடந்த கொடூரம்
இந்தியாவில் கிரேட்டர் நொய்டாவில் நபர் ஒருவர் தன் தோழிக்கு கொடுத்த பரிசை ஏற்க மறுத்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் அனுஜ் (வயது – 21) என்பவரே தனது தோழியான சிநேகா (வயது – 21) என்பரை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அனுஜ், நேற்று சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில், சிநேகாவை சந்தித்துள்ளார்.இருவரும் பேசிக்கொள்ளும் மற்றும் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சிகள் அங்குள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
அனுஜ் ஏதோ பரிசுப்பொருள் ஒன்றை சிநேகாவுக்குக் கொடுக்க, அதை ஏற்க மறுத்துள்ளார் சிநேகா. அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி ஒன்றை எடுத்து சிநேகாவை சுட்டுள்ளார். குண்டடி பட்டநிலையிலும் சிநேகா அனுஜைத் திருப்பித் தாக்க, அனுஜ் மீண்டும் சுட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிநேகா வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
பின்னர் தன் அறைக்குச் சென்ற அனுஜ், துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சிநேகாவும் அனுஜும் நீண்ட நாட்களாக பழகிவந்ததாகவும், சமீபத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்