நல்லதண்ணி வன பகுதியில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தில் 8 ம் நம்பர் தேயிலை மலையில் நேற்று முன் தினம் திங்கடகிழமை பணிக்கு சென்ற வெளிகல உத்தியோகத்தர் சிறுத்தை குட்டிகளை கண்டு நல்ல தண்ணீர் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து நல்ல தண்ணீர் வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு வந்து பார்வை இட்ட பின்னர் தாய் சிறுத்தை இல்லாமல் குட்டிகள் இரண்டையும் தமது பாதுகாப்பில் எடுத்து தாய் சிறுத்தையிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .
