தொடர்ந்து அதிகரிக்கும் மரக்கறி விலை

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பேலியகொட மெனிங் சந்தை நிலவரப்படி பொதுச்சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில்,

ஒரு கிலோகிராம் கரட் 420 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 520 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோவா 360 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணி 280 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும், தேசிக்காய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும்,  ஒரு கிலோகிராம் தக்காளி 440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.