திருமலை குழுமோதலில் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பேதிஸ்புர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற குழுமோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த குழு மோதல் சம்பவத்தில் மட்கோ-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் கால்,கைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.