-திருக்கோவில் நிருபர்-
இலங்கை ஜனநாய சோஷலிஸ்ச குடியரசின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் அலுவலக முன்றலில் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் குறித்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளரினால் தேசிய கொடியேற்றப்பட்டதுடன் சக உத்தியோத்தர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.
இலங்கை ஜனநாயக குடியரசின் 77ஆவது சுதந்திர தின விசேட உரை பிரதேச செயலாளரினால் நிகழ்த்தப்பட்டது.
குறித்த உரையில் கிளீன் ஸ்ரீ லங்கா தொடர்பில் உத்தியோத்தர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் அலுவலக உத்தியோத்தர்களினால் மரநடுகை நிகழ்வு மற்றும் அலுவலக சூழல் துப்பரவுப்பணியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன்போது திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் திருமதி.எஸ்.நிருபா மற்றும் உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உஷாந், நிர்வாக உத்தியோத்தர் திரு.மங்களா கணக்காளர் ஜனாப் ஏ.எல்.எம்.றிபாஸ் கிராமசேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் கந்தசாமி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் அரசரெத்தினம் அலுவலக உத்தியோத்தர்கள், கிராம சேவையாளர்கள், சமுத்தி உத்தியோத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோதர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்