திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு

-திருக்கோவில் நிருபர்-

அம்பாறை – திருக்கோவில் பிரதேச சுவாட் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தம்பிலுவில் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளரும் திருக்கோவில் பிரதேச இணைப்பாளருமான பிறேமலதன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் த.கஜேந்திரன் சுவாட் அமைப்பின் தலைவி கமலாதேவி மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பி.பத்மகுமார ஆகியோர் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர் கலைவதனி, உளவிய உத்தியோத்தர் பஸ்மியா, திருக்கோவில் பொலிஸ் நிலை சிறுவர் மகளிர் பொறுப்பதிகாரி கே.விஜிதா ஒய்வு நிலை கோட்டைக்கல்வி பணிப்பாளர் ரவீந்திரன், சமுர்த்தி முகாமையாளர் கண்ணதாசன் ஓய்வு நிலை கிராம சேவையாளர் இரா.இராசரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க