தாமரை கோபுர நுழைவுச்சீட்டு தொடர்பில் சர்ச்சை

கொழும்பு தாமரைக் கோபுரத்தினை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையொன்று உருவாகியுள்ளது.

குறித்த நுழைவுச்சீட்டில் சீன மொழியில் எழுதப்பட்டு, தமிழ் மொழி தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன மெதழியுடன் போலியாக குறித்த நுழைவுச்சீட்டு சமூக வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக, சீன தூதரகம் அறிவித்துள்ளது.

உண்மையான நுழைவுச்சீட்டையும் சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் இணைத்துள்ளது.