தாமரை கோபுரம் திறக்கப்படுகின்றது : கட்டணங்கள் அறிவிப்பு

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் (Lotus Tower) செயற்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.500 தொடக்கம் 2,000 வரை அறவிடப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.