தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

-யாழ் நிருபர்-

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கருணாகரன் அருட்சாந்தன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு கொண்டுள்ளார்

இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.