தலவாக்கலையிலிருந்து காலிமுகத்திடலுக்கு தனிமனித நடைபவனி போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 9.30 மணிக்கு தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த தனிமனித நடைபவனி போராட்டம் காலிமுகத்திடலில் இணைந்து கொள்வதற்காக இன்னும் மூன்று தினங்களில் சென்று அடையும் நோக்குடன் அவர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.