தம்பலகாமம் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கர் மற்றும் பதிவு நடவடிக்கைகள் நேற்று குறித்த பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றன.
இதன்போது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் பொலிஸ் நிலைய தொலை பேசி இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இதன் மூலம் முச்சக்கர வண்டிகளை களவாடுதல் உட்பட முற் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நடவடிக்கையை தம்பலகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
