தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

சபுகஸ்கந்தவில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 11.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அதேவேளை தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இராணுவத்தினரும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.