கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம்இ ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விஜயரத்தினம் சரஸ்வதி (வயது 68) என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், வீட்டில் தனிமையில் இருந்தபோது இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.