மன்னம்பிட்டியவில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணியளவில் புகையிரதம் செல்லும் போது தண்டவாளத்தில் உறங்கிங் கொண்டிருந்த வயோதிபர் ரயில் சாரதியின் செயற்பாட்டால் உயிர் தப்பியுள்ளார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியால் சென்று கொண்டிருந்த போது எழும்ப முடியாமல் தண்டவாளத்தில் வயோதிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த ரயில் சாரதி ரயிலை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார்.
மேலும், போதையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ரயிலில் ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் உடனடியாக செயல்பட்டு வயோதிபரின் உயிர் ரயில் சாரதியின் இந்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்