டீசல் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் வாகன சாரதிகள்

பசறை நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாகவும், டீசலை பெற்றுக் கொள்வதற்காக வாகன சாரதிகள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் பசறை நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் டீசல் விநியோகிக்கப்பட்டது.

இருப்பினும் அன்றைய தினம் வரிசையில் காத்திருந்த சாரதிகள் டீசலை பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அன்றிலிருந்து இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் டீசல் பெற்றோல் இல்லாததால் மூடப்பட்டு இருந்தன.

அத்தோடு, இன்று வெள்ளிக்கிழமை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் வாகன சாரதிகள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.