டிசம்பர் வரை விடுமுறை இன்றி பாடசாலைகள் நடைபெறும்?

டிசம்பர் மாத தொடக்கம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் வாரத்தின் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.

போக்குவரத்து சிரமங்கள் குறித்த முறைப்பாடுகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை

அவ்வாறு ஏதேனும் ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்து சபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினை தீர்க்கப்படும்

கொவிட் பிரச்சினை தொடர்பிலும் எச்சரிக்கை எதனையும் சுகாதார அமைச்சு இதுவரையில் முன்வைக்கவில்லை.

அதற்கான வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வழங்கினால் அதன்படி பாடசாலைகள் செயற்படுத்தப்படும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.