ஜெய்சங்கர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

முன்னதாக அவர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை முற்பகல் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் இவர் பங்கேற்கவுள்ளார்