ஜூலை 9 சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 38, 35 மற்றும் 44 வயதுடைய பாதுக்க மற்றும் வட்டரக பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளவுள்ளனர்.