ஜனாதிபதி மாளிகை ஆக்கிரமிப்பு சம்பவத்தில் தேடப்படும் வர்த்தகர் ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கடந்த மாதம் 9 ஆம் திகதி ஆக்கிரமித்த போது அதற்குள் நுழைந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த கோடீஸ்வர வர்த்தகரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவர் ஒரு நாட்டில் உள்ள ஒரு பெரிய இரும்பு தொழிற்சாலையில் முதலிடம் வகிப்பவர் என்றும், தற்போது ஆபிரிக்க நாட்டில் தங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.