ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக மீண்டும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு

-யாழ் நிருபர்-

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பத்தாவது பொதுச்சபை கூட்டம் நேற்று சனிக்கிழமை இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கட்சியின் புதிய நிர்வாக தெரிவுடன், அக்கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும், பொருளாளராக க.சிவநேசனும், ஊடகப் பிரிவின் தலைவராக பா.கஜதீபனும், சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவாகியுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்து கொண்டிருந்ததுடன், தீர்மானங்களும் எட்டப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.