பேராதனையில் சொக்லேட் மீது மோகம் கொண்ட 67 வயது நபர் ஒருவர் கடையில் இருந்து ஒரு சிறிய சொக்லேடை திருடியதாகக் கூறி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளரும் அவரது ஊழியர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும்,
தனது பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டு வேறு பகுதிகளில் குடியேறிய பிறகு அவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிக்கப்படுகின்றது.
அவர் ல் முந்தைய நாள் அவர் சொக்லேட்டுகளைத் திருடுவது கடையின் சிசிரிவியில் திவாகியுள்ளதால் உணவுப் பொருட்கள் வாங்க ஊருக்குச் சென்றபோது, கடையில் இருந்த இரண்டு ஆண்கள் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
சொக்லேட் சாப்பிட வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையே அவரைத் திருடத் தூண்டியது என்றும் அந்த சொக்லேட்டை வாங்குவதற்கு அவரிடம் பணம் இருந்திருக்கவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் அவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியோரத்தில் விட்டுச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அந்த வழியாகச் சென்ற ஒரு பெண் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், சம்பவம் தொடர்பாக மரணப் படுக்கையில் இருந்தபோது அவர் அறிக்கை அளிக்க வேண்டிய நிலையில் இருந்தார்.
பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.