சுயாதீன எம்.பிக்கள் குழு பிரதமருக்கு ஆதரவு

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அமைச்சுக்களையும் ஏற்காமல் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாவும் கம்பன்பில தெரிவித்தார்.