நாட்டில் நாளை முதல் அமுலாகும் வகையில் சில உணவுப்பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாயினாலும் கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 25 ரூபாயினாலும் சிற்றுண்டி உணவுகளின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே உணவு பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.