களுத்துறை சிறைச்சாலையில், பெண் ஒருவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கணவனை பார்வையிடச் சென்ற பெண் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த பெண்ணிடம் இருந்து 440 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.