சிரேஷ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

வீ.சு.கதிர்காமத்தம்பியின் பிறந்த தினமான இன்று கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவ அதிரன் தலைமையில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைக்கப்பட்டது

இதன் போது சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு பெயர்ப்பலகை அவரது பாரியாரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின், மாநகர சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வீ.சு.கதிர்காமத்தம்பியின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.