சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மூதூர் பிரதேச கடல் எல்லைக்குள் நேற்று சனிக்கிழமை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேச ஹபீப் நகரைச்சேர்ந்த முப்பது தொடக்கம் நாற்பது வயதுக்கு இடைப்பட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க உதவுதல், தமது கடமையை செய்யவிடாது செயற்பட்டமை தொடர்பாக திருகோணமலை கடற்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்து துறைமுகப்பொலிஸார் வசம் ஒப்படைத்தாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைது செய்ப்பட்டவர் பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டு துறைமுகப்பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களையும் கைப்பட்டப்பட்ட படகையும் இன்று ஞாயிற்று கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துறைமுகப்பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.