அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்றவரும் வாங்கியவரும் கைது

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில், 380 லீற்றர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும் அதனை வாங்கிய நபரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவில் விஷேட சுற்றிவளைப்பு நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இதில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த 380 லீற்றர் மண்ணெண்ணெயினை பொலிஸார் கைப்பற்றினர்.

அந்த மண்ணெண்ணையினை ஒரு லீற்றர் 800 ரூபாவிற்கு விற்பனை செய்த நாவற்குழியினை சேர்ந்த ஒருவர் மற்றும் வாகன சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களையும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.