சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட எரிபொருளுடன் இருவர் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் டீசல் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுற்றி வளைப்பின்போது 200 லீற்றர் டீசல் மற்றும் 100 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிண்ணியா முனைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து முச்சக்கரவண்டியில் எரிபொருளை எடுத்து செல்லும் வழியிலேயே பொலிஸாரால் குறித்த முச்சக்கர வண்டி மடக்கிப் பிடிக்கப்பட்டது.

இதன்போது 04 கொள்கலன்கள் மீட்கப்பட்டதுடன் அவர்களது வீட்டிலிருந்து 4 கொள்கலன்களும் மொத்தமாக 8 கொள்கலன்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் எரிபொருளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும், திங்களன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாவும் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாண்டோ இதன்போது தெரிவித்தார்.