கோட்ட கோகமவின் செயற்பாட்டாளரான புஷ்பிக கைது

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்ட கோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்க புஷ்பிக கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர், கோட்டையில் வைத்து நீல நிற ஜீப்பில் இனந்தெரியாத குழுவினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்தநிலையில் இவர் கடத்தப்பட்டதில் உண்மையில்லை என கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். பொலிசார் அவரை கைது செய்துள்ளதாகவும் கோட்டை பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.