கொழும்பு துறைமுகத்தில் 4 எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளது

இந்தியாவின் கடன் உதவியில் வழங்கப்படும் எரிபொருள் வழங்கலில், 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த டீசல் கப்பலுடன் சேர்த்து தற்போது கொழும்பு துறைமுகத்தில் 4 எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 4 கப்பல்களில் இன்று இரண்டு கப்பல்களுக்கு டொலர் வழங்கப்பட்டு அவற்றிலிருந்து டீசல், பெற்றோல் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் இன்னும் 10 நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

அத்துடன், சமையல் எரிவாயு  கப்பல்கள் இரண்டு நாட்டிற்கு வந்துள்ளன.

இவற்றிற்கான 7 மில்லியன் டொலர் நாளை மறுதினம் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது.