-பதுளை நிருபர்-
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று வெள்ளி கிழமை இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து இவர்களை கொட்டியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட நபர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்தார்.