
குமார் தர்மசேன தொடர்பில் ICC எடுத்துள்ள தீர்மானம்
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை பெயரிட சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையின் குமார் தர்மசேனவும் இடம்பெற்றுள்ளார்.
இந்த போட்டித் தொடருக்கு 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியின் நடுவர்களாக குமார் தர்மசேன மற்றும் இந்தியாவின் நிதின் மேனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்