பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டடத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த கட்டடத்தில் உள்ள கதிரை ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திணைக்களத்தின் சுத்தப்படுத்தல் பிரிவில் பணியில் இருந்த ஹோகந்தர பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.