கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஜப்பான் 565 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பானின் வெளிவிவகார நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்ற உப அமைச்சர் சயமா அகிகோ மற்றும் நிதியமைச்சர், செயலாளர் மகிந்த சிறிவர்த்தன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
குறித்த நிதியுதவி மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்