-எம்.எஸ்.எம்.ஸாகிர்-
விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் கல்வி சமய ஆலோசனை சபையின் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் அண்மையில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தில் ஆன்மீக முன்னேற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் 128 உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், பெளத்த, ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத் தலைவர்கள் உட்பட கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
