கதிர்காம யாத்திரையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி மக்களே எச்சரிக்கை!

கதிர்காமத்துக்கான நடைபாதை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று செவ்வாய் கிழமை காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 63 வயதுடையவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

கதிர்காமத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு குறித்த பெண் சென்றபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்

இதேவேளை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்