மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தமது கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.