கடல் தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணை வினியோகம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீரியல்வள திணைக்களத்தின் ஏற்பாட்டில், பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையத்தின் ஊடாக, கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் வினியோகம் இடம்பெற்று வருகின்றது

பலத்த சிரமத்தின் மத்தியில் மண்ணெண்ணையை தமக்கு பெற்று  தந்த கடற்தொழில் அமைச்சு மற்றும் நீரியல்வள துறையிருக்கும் கடற்தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளார்

முன்னைய நாட்களில் 1500 தொடக்கம் 2000 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் பெற்று தொழிலை மேற்கொண்டு வந்ததாகவும், தற்போது சுமூகமான முறையில் கடற்தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.