ஒவ்வொரு மாதமும் விலை திருத்தம் : லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் எரிவாயு விலையை விலை சூத்திரத்திற்கு ஏற்ப திருத்த நடவடிக்கை எடுக்கப்படும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி அராம்கோ சுட்டெண்ணைப் பயன்படுத்தி விலை சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலை தீர்மானிக்கப்படுவதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் பல எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.