ஒக்சிஜன் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சா மீட்பு

கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியரொருவர் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கன்தளாய் சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடி படையினருக்கு நேற்று சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சிற்றூயரை விசாரணை செய்தபோது ஒக்சிஜன் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சா 305 கிராம் 250 மில்லி  கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிற்றுழியராக கடமையாற்றி வரும் மெதிரிகிரிய-நவநகர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை விஷேட பொலிஸ் அதிரடி படையினர் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.