ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதிக்கான இரங்கல் செய்தி

-கல்முனை நிருபர்-

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதி மர்ஹூம் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கான இரங்கல் தெரிவிப்பதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் சென்று, அங்கிருந்த அனுதாப செய்தியறிவிக்கும் புத்தகத்தில் தமது அனுதாப செய்தியை பதிவிட்டனர்.