எரிபொருள் கொள்வனவிற்காய் சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து கடன் பெற பேச்சுவார்த்தை

எரிபொருள் கொள்வனவு செய்ய சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெற பேச்சுவார்த்தை ஒன்று தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நோக்கத்துடன், இந்தியா மற்றும் சீனாவுடன் புதிய கடன் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடங்கவுள்ளது, என Sunday times செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் வாங்குவதற்கு இந்தியாவிடமிருந்து இன்னும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மட்டுமே மீதமுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது