எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அத்தியாவசிய சேவைகள் என அடையாளம் காணப்பட்ட ஒரு துறை விசேட பிரிவாக நியமிக்கப்பட்டு, அதற்காக எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர மீளாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளை பதிவு செய்தல், பயண எரிபொருள் அனுமதிப்பத்திரம் போன்ற எரிபொருள் அனுமதிப்பத்திர முறை தொடர்பான ஏனைய சில நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.