உரமும் இல்லை அதை பெறுவதற்கு இடமுமில்லை

உரமும் இல்லை.அதை பெறுவதற்கு இடமுமில்லை.

தற்போது விவசாய செய்கைகளுக்குத் தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு உரியவாறு கிடைக்கவில்லை எனவும், உரத்தைப் பெற்றுவதற்கான சரியான இடமொன்று இல்லை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபையில் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்கு ஏற்றால் போல் விவசாயிகளுக்கு உரம் கிடைத்தவாறு இல்லை எனவும், இது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.